Saturday, July 21, 2012

மாற்றம்

இம்முறை வானம் கறுத்து பொழிந்த அழகை உன்னிடம் சொல்லத் தோன்றவில்லை, அன்றிரவு கண்ட கனவும், தொடர்ந்து எழுதிய கவிதையும் உனக்கு தெரியாது.

இப்பொழுது உறுத்துகிறது ஏன் மாறிவிட்டதென. உன்னால் உணரவாவது முடிகிறதா?

தண்ணீர்

இம்முறை உடைந்தழும் என் கண்ணீர் குடங்கள், எத்தனை நாள் உனை கண்டு பனித்திருக்கின்றன...

வலை இல்லாத படகுக்காக கடல் மீது குமுறும் மழைக்கும், பூ மீது நீர் தூவ மலையை சுற்றும் சாரலுக்கும் அவ்வளவு பேதம்.